lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu satha – vani jayaram

Loading...

நித்தம் நித்தம் நெல்லு சோறு
நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு

என்ன இழுக்குதையா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு
வந்து மயக்குதையா

பச்சரிசி சோறு
உப்பு கருவாடு…
சின்னமனூரு வாய்க்கா சேலு கெண்ட மீனு
குருத்தான மொள கீர வாடாத சிறு கீர
நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊருது
அள்ளி தின்ன ஆச வந்து என்ன மீறுது
(நித்தம் நித்தம்)

பாவக்கா கூட்டு பருப்போட சேத்து
பக்குவத்த பாத்து ஆக்கி முடிச்சாச்சு
சிறுகால வருத்தாச்சு பதம் பாத்து எடுத்தாச்சு
கேழ்வெரகு கூழுக்கது ரொம்ப பொருத்தமையா
தெனங்குடிச்சா ஒடம்பு இது ரொம்ப பெருக்குமையா
(நித்தம் நித்தம்)

பழயதுக்கு தோதா புளிச்சி இருக்கும் மோரு…
பொட்டுகள்ள தேங்கா பொட்டரச்ச தொவயலு
சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும்
அதுக்கு எடம் ஒலகத்துல இல்லவே இல்ல
அள்ளி தின்னு எனக்கு இன்னும் அலுக்கவே இல்ல
இத்தனைக்கும் மேலிருக்கு நெஞ்சுக்குள்ள ஆச ஒன்னு
சூசகமா சொல்ல போறேன் பொம்பள தாங்க
சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க
(நித்தம் நித்தம்)

lirik lagu lainnya :

YANG LAGI NGE-TRENDS...

Loading...